Translate

Tuesday, July 24, 2007

பிரியமானவளே !........

எனைக் கொடுத்து
உனைத் திருட
நினைத்திருந்தேன்.
ஏற்கவில்லை
என் மனத்தை.
இழக்கவில்லை,
கொடுக்கவில்லை,
உன் மனத்தை.

நிறைக்குறை அளந்தேன்,
இருபுறமும்.
சமமென நினைத்தேன்
சரி தானே.
இல்லை, கொடுத்தாயா
உன் மனத்தை
வேறிடமே.அறியா நிலையுடனே
கேட்டேன் உன்னிடமே.

நட்பென கூறி
என் காதலையே
முறித்து விட்டாய்.
ஒருதலைக் காதலால்
துடித்து விட்டேன்.
நட்பொன்றே போதுமென
பிரிந்து விட்டாய்.
மனமொடிந்து விட்டேன்,
பிரிக்க முடியா காதலுடன்.

No comments: