Translate

Wednesday, August 8, 2007

ஹைக்கூ கவிதைகள்....

நான்
%%%%

குளம்பி விட்டேன்
குளப்பி விட்டேன்
மனம் தெளிவதற்கு
நாரதராய் நான்.
################

நீ.நீ..நீ....
%%%%%%%

நல்லவன் என்றோ,
வல்லவன் என்றோ
சொன்னதில்லை நான்
ஆனால்
சொல்கிறாய் நீ...
மோசமானவன் என்று.
##################

முத்தங்கள்
%%%%%%

நீ தந்தது
என்னில்
ஐஸ்கட்டிகளாய்.

குளிர்பானமாய்
நான் தந்ததையே
திருப்பித் தந்தாயோ
ஐஸ்கட்டிகளாய்.
################

மாயக்கண்ணாடி
%%%%%%%%

நான் சிரித்தால்
நீயும் சிரிக்கிறாய்.
நான் அழுதால்
நீயும் அழுகிறாய்.
என் மனமென்ன
கண்ணாடியா
எதிரொளிப்பதற்கு.
###############

அரவணைப்பினால்
%%%%%%%%%

உன்னிடத்தில்
விழுந்த நான்
எழ முடியவில்லை
அடிப்பட்டதால் அல்ல.
#################

காண முடியவில்லை
%%%%%%%%%%%

அன்று விதையாய்
இன்று மரமாய்
முழுமையாய்
காண முடியவில்லை.
என் இதயத்தில்
நீ அடர்ந்து
வளர்ந்து இருப்பதால்.
##################

கை தேர்ந்தவள்
%%%%%%%%

நினைத்திருந்தேன்
கபடமற்றவள்,
கள்ளமில்லாதவளென
அறிந்து கொண்டேன்
உன் செயலால்
கை தேர்ந்தவள் நீயுமென.
#################

அத்தனையும்-- சி
%%%%%%%%%

அறிந்துக் கொள்ள பயிற்சி.
வெற்றிக் கொள்ள முயற்சி.
எடுக்க வேண்டும் தொடர்ச்சி.
இல்லையெனில் இகழ்ச்சி.
####################

No comments: