Translate

Friday, August 24, 2007

ஹைக்கூ கவிதைகள்....

இதயம்
^^^^^

இதயம் இருக்கிறது
மனத்தைப் படிக்க.
வார்த்தைகள் இல்லை
வடித்துத் தர.
---------------

இரவு திருடர்
^^^^^^^^

உண்டிடுவார், உறங்கிடுவார்
பகல் பொழுதினிலே.
விழித்திருப்பார், சென்றிடுவார்
இராப்பொழுதினிலே.
---------------------

ஸ்வர ஜுரம்
^^^^^^^^

இசைமழையில் நனைந்தேன்
ஸ்வர சு(ஜு)ரத்தால்.
மழை நின்றது
சு(ஜு)ரமும் அதிகமானது.
காத்திருக்கிறேன்-மீண்டும்
இசைமழையில் நனைந்திடவே.
-----------------------

நினைத்துப் பார்
^^^^^^^^^^^
என்ன என்று
எப்படி என்று
நினைத்துப் பார்
உன் மனத்துக்குள்ளே.

அறிந்துக் கொண்டால்,
செய்து முடித்து
வெற்றிப் பெறலாம்
நினைத்து விட்டால்.
---------------

துடிப்பு
^^^^^
துடிக்கின்றான் நோயாளி
நோயின் வலியினால்.
துடிக்கின்றார் குடும்பத்தார்
விரைவில் குனமடைய.
துடிக்கின்றனர் செவிலியர்
இயந்திர கதியில்.
துடிக்கின்றார் மருத்துவர்
துயரை நீக்க.
-----------------

ரோஜா காதல்
^^^^^^^^^^
காதல் என்பது
ரோஜாவை போல.
அழகை நினைத்து
தவறாகி விட்டால்,
அதிகமாயிருக்கும்
முட்களின் வலி,
ரோஜா இதழ்களின்
மென்மையை விட.
--------------

No comments: