Translate

Sunday, August 26, 2007

காசுப் போட்டு..

காசுப் போட்டு
செலவழித்து
நீரை வாங்கி
குளித்தனர், குடித்தனர்
இலவசமாய் கிடைத்த
நீர்நிலையை அழித்து விட்டு.

இயற்கையாய்
கிடைக்கும் நீரை
வீனாய் ஓட விட்டு,
சிறுதுளி பெருவெள்ளம்
மழைநீரை சேமிப்பீர்
விளம்பரம் செய்தனர்
வீனாய் செலவு செய்து.

விளம்பரம் ஒவ்வொன்றும்
பல லட்சம் பெறும்.
நீர்நிலையை மேன்படுத்த,
ஊருக்கு ஒன்றாய்
சில லட்சமெனசெலவழித்தால்,
நிச்சயம் வளம் பெரும்.

2 comments:

Anonymous said...

இலவசமாய் கிடைத்த

நீர்நிலையை அழித்து விட்டு. காசுப் போட்டு குளித்தனர், குடித்தனர்.....
mmmmmmm......

Dhavappudhalvan said...

நகரங்களில் இருந்த இந்நிலை கிராமங்களையும் தொட்டு விட்டது என்ற வருத்தம் தான் சகோதரி.