Translate

Tuesday, August 21, 2007

ஹைக்கூ கவிதைகள்....

நான் !
****

பறக்க நினைக்கும்
சிறகொடிந்த பறவை
நான்
நகரக்கூட முடியவில்லை
விதியின் காலடியில்.
++++++++++++++++

நீ...!!
*****

நீ இருப்பதைப் பார்த்தாலும்
நீ இல்லாத்தை அறிகின்றேன்.
நீ இல்லாத்தை உணர்ந்தாலும்
நீ இருப்பதாக நினைக்கின்றேன்.
+++++++++++++++++++++++

வானமே !
********

ஓ... உருவமில்லாதவனே !
வர்ணங்களை எப்படித்தான்
வாரிப்பூசிக் கொள்கிறாயோ ?
+++++++++++++++++++

இல்லை !
*******

நான் சொல்லித்தான்
புரிந்து கொள்ள
போவதில்லை.

நான் சொல்லாமல்
நீ அறியாமல்
போவதுமில்லை.
++++++++++++++

அவசரக் காதல்
**********

கண்ணும் கண்ணும் கண்டதும்
காதல் வந்தது.
காதல் வந்த நொடியிலே
புன்னகை மலர்ந்தது.
மலர்ந்த புன்னகை மறையுமுன்னே
பிரிவு வந்தது.
+++++++++++++++++++++++

தவறவிட்டேன்.
**********

காத்திருந்த நான்
கலந்துக் கொள்ள தவறிவிட்டேன்
கவிதைப் போட்டியில் தான்.
++++++++++++++++++++

என் நாட்கள்
+++++++++

ஒலியின்றி தான்
ஒளிர்கிறது மனத்திலே
ஒழிந்த என் நாட்கள்.
++++++++++++++

No comments: