Translate

Sunday, August 26, 2007

ஏற்றமா? ஏமாற்றமா?

ஓ....!!! நேற்று மாலை சுமார் 4.30 மணி அளவில் எம் வீட்டிலே, பூங்காற்று நுழைந்தது. உணருமுன்னே, புயற்காற்றாய் பிரிந்தது எமை விட்டு. ஆமாம், அது வேறொன்னுமில்லைங்க. வலைநண்பர்.திரு.பாலசுப்ரமணியம் கணபதி @ G.கிருக்கன் அவர்கள், (Composetamil.com)படைப்பாளிகள், வாசகர்களில் சிலராவது, அவரது படைப்புகளையும்,விமர்சனைகளையும் மற்றும் 2 Blogsயும் வாசித்து இருப்பீர்கள், அவர் முன்கூட்டியே அனுமதி பெற்று, மைசூர் ஹூப்ளியிலிருந்து எம்மை சந்திக்க வந்திருந்தார். இவ்வளவு தூரம் நம்மைத் தேடி ஒருவர் வந்திருக்கிறாரே, என்ற மகிழ்ச்சியை மனது உணர்ந்து, நிரப்பிக் கொள்ளும் முன்பாகவே,நேரமின்மையைக் காரணம் காட்டி, சில நிமிடத்துளிகளில் விடைப்பெற்றது, ஏமற்றத்துடன் ஏக்கமும் அடையசெய்தது.

எனது படைப்புகளை உடனுக்குடன் அலசுபவர்களில் இவரும் முக்கியமானவர். நிமிடத்துளிகளில் விடைப்பெற்றதால், நினைத்த எண்ணங்கள் கரைந்தது மனத்துக்குள்ளே. இவ்வளவு ஏமாற்றம் இருந்தாலும், அறிமுகப்படுத்திக் கொள்ள நேரில் சந்திக்க வந்ததை ஏற்றமாகவே கருதுகிறேன். இதன் மூலம் என் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்கிறேன்.

No comments: