Translate

Saturday, August 25, 2007

புலம்பல் !

உன் வார்த்தையைக் கேட்கின்றேன்,
நிசமென்று நம்புகின்றேன்.
உன் செயலைப் பார்க்கின்றேன்.
பொய்யை உணர்கின்றேன்.
கண்ணால் கண்டதும் பொய்,
காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரிப்பதே மெய்.
விசாரிக்கும் போது
நழுவுகிறாயே வாலைமீனாய்.
வென்று விட்டாய் நீ.
தோற்று விட்டேன் உன்னிடமும்
தோல்விகளையே சந்திக்கும் நான்.

No comments: