கட்டி அணைக்கிறேன்
கனவுகளில் உன்னை நான்.
கட்டிய மணாளா
கரைந்து நீ போனதெங்கே?
தனிப்பட்டு குடும்பம்
தள்ளாடி நிற்க
தவிக்க விட்டு நீ
தனியாய் போனதெங்கே?
அப்பாவெனும் குழந்தைகளுடன்
அபலையாய் நான் துடிக்க,
அத்தனையும் துறந்து விட்டு
அமைதியாய் போனதெங்கே?
அலையலையாய் விழிநீரும்
அருவியாய் வழிந்தோட,
அள்ளி அணைத்து அகற்றி விட
ஆறுதலாய் நீயின்றி போனதெங்கே?
No comments:
Post a Comment