ஓரப்பார்வை நான் பார்க்க - உன்
கள்ளப்பார்வையில் களிப்பிருக்கும்
பார்வையை முழுதாய் பறித்தது போல்
காரிருளில் மறைந்து நீ போனதெங்கே?
உன் இதயத்துடிப்பை என் செவிமடுக்க
என் கூந்தல் மணத்தை நீ நுகர்ந்தாய்.
விரல்களின் விளையாட்டில் நான் சொக்க,
விளையாட மறந்து போனதெங்கே?
உணர்வுகளின் வேக முத்துக்கள்
உடலெங்கும் பூத்து தித்திக்க
களிநடனம் ஆடிய நாட்களை
கனவுகளாக்கி போனதெங்கே?
ஒன்றுக்குள் ஒன்றாய் குடியிருந்தோம்
ஓராயிரம் இரவுகள் களித்திருந்தோம்
குறை உனக்கு ஏதேனும் வைத்தேனோ
வாழ்வை முடித்து போனதெங்கே?
No comments:
Post a Comment