விரல்களை
மடக்கி விரிக்கின்றேன்
விடுப்பட்ட
கணக்காய் தவிக்கின்றேன்
உதவிக்கு
நீயும் உடனின்றி
உதறி
விட்டு போனதெங்கே?
செல்ல
கொஞ்சல்கள் பகிர்ந்ததினால்
செல்லங்கள்
செழிக்கும் நிலைக்கண்டோம்
அவை
வதங்கி போகும் நிலையில்
உரமான
நீ போனதெங்கே?
கிளை
விடும் நேரத்தில்
வேர்
அழுகி போனது போல், (ஆணிவேர்
அறுந்தது போல)
உறவு
செழிக்கும் நேரத்தில்
அறுந்து
நீ போனதெங்கே?
சூறைக்காற்றில்
ஓட்டை விழுந்து
மூழ்கும்
நிலை கப்பல் போல்
குடும்பத்தை
இயக்கும் மாலுமி நீ
சுக்கானை
விட்டு போனதெங்கே?
No comments:
Post a Comment