சுமையின் சிரமத்தை உணர செய்து
உன் பாடு என் பாடு
பிரிக்கமுடியா நம் பாடு
உன்பாடென கூறாமல் - நீ
அத்தனையும் படுயென போனதெங்கே?
அலைக்கடலாய் எண்ணங்கள்
ஆர்பரிக்கிறது நெஞ்சத்தில்
மூச்சடைத்து நான் தவிக்க
மூச்சை துறந்து போனதெங்கே? தழுவும் காற்றும் அனலென காய,
நடுநிசி பொழுதில் குளிர்நீர் தழுவ,
தழுவிய நீரிலும் ஆவி பறக்க,
தனிமையில் விட்டு போனதெங்கே?
No comments:
Post a Comment