Murali Kasipathy &
Shobana Badri
வீதியெங்கும் தோரணங்கள்
பட்டாடைகளுடன் சலசலக்க,
பவனியோ வாகனத்தில்
பரவசமுடன் தொடர்ந்திருக்க,
அத்துடன் நினைவுகளும்
தொடர்ந்ததே இணையாக.
காலமது மகிழ்வாக,
கடந்ததோ நிறைவாக,
வளர்பிறைகள் வானத்திலே,
வந்தனைக்கட்டும் நெஞ்சத்திலே,
குலதெய்வம் அருள் புரிய,
குதுகலமாய் நாட்கள் கழிய,
கொண்டாடும் நிலையாக,
நித்தமும் மகிழ்வாக,
நலனும் வளனும்
நாடி வந்து தோள் கொடுக்க,
உம் குடும்பமது சிறக்கவும்
உயர்வாய் நீங்கள் வாழவும்,
நல்லாசிகள் வழங்கினோம்.
முன்கூட்டியே இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் இளம் தம்பதிகளே.
No comments:
Post a Comment