புதிதாய் பூத்த மலரிது
அழகு ரோஜா இதுவது
சாதனைக்கு உரு கொடுக்க
சாதனாவாக உருவெடுத்தாள்
தாயின் கருவறையில்
தனி இராஜ்ஜியம் கண்டயிவளோ,
உறவுகளை சோதித்தாள்
உள்ளிருப்பு நடத்தி.
வெற்றிப்பார்வை படரவிட்டாள்
வெளியுலகைக் கண்டவுடன்.
நகலெடுத்த பிறப்பாக
நறுமணப் பொருளாக
ஒளி வீசும் விழிகளுடன்
ஒப்பற்ற பூமியிலே
அவதரித்தாள்
மென்பஞ்சு குவியலாக.
#சென்ற 2011ல் பேத்தி பிறந்தபோது எழுதியதுயிது
No comments:
Post a Comment