விழிகளைப் பொத்தி
விளையாடும் நேரத்தில்
ரசித்து நீயும்
அமைதியாய் இருப்பாய்.
கைகளை விலக்கி
விலகியே சென்றாலும்,
விழிகளை மூடி
இலயத்து இருப்பாய்.
அத்தனையும் அறிந்தும்
விளையாட்டு காட்டுவேன்
மகிழ்விலே நீயும்
மூழ்கி கிடக்க.
இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே .
No comments:
Post a Comment