உன் விழி கூறும் செய்திகளை
மொழியாக்கம் செய்ததை,
அகராதியாய் தொகுத்து விட
முயன்றேன் குறியாக,
பொருளறியா செய்திகளோ
அளவின்றி குவிந்ததினால்
தொகுப்பதில் குறையதை
உணர்ந்தேனே முழுமையாக.
உன் நினைவுகளின் மழையினிலே
தடையின்றி நனைகின்றேன்,
தொடர்கின்ற நிகழ்வுகளினால்
திளைக்கின்றேன் மகிழ்வாக.
என் உடல்நிலை தளர்ந்ததை
ஊரறிய செய்து விட்டாய்.
கேள்விகளோ எனைத் துளைக்க
சல்லடையாய் ஆனாலும்
சலனமின்றி உன் நினைவில்
ஞானியாய் அலைகின்றேன்.
No comments:
Post a Comment