Translate

Friday, April 17, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - A.M.பத்ரி நாராயணன் ( தவப்புதல்வன் ) & ஸ்ரீமதி.B.ராஜராஜேஸ்வரி



இன்று எங்கள் 34வது வருடதிருமணநாள் நட்புகளே.

34 வருடங்களை கழித்து 35வது வருட குடும்ப வாழ்வில் நுழைந்திருக்கிறோம். நட்புகளில் பெரியவர்களின் ஆசிகளையும், வாழ்த்துகளையும் மற்ற நட்புகளின் வாழ்த்துகளையும் அன்புடன் எதிர்ப்பார்த்து.

இனியவளே இன்று நமக்கு திருமணநாள்.
உமக்கு  திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ராஜராஜேஸ்வரி 



என்னவளே, உன்   நினைவுகளோ
நித்தமும் ஆட்சி செய்ய,

ஆரவாரமின்றி கழிகிறது
நாட்களது விரைவாக.

உரிமையென ஆனதினால்
உள்ளத்தையே பறிக்கொடுத்தோம்
விந்தையாய் இருக்கிறது
நாட்களது வருடங்களாய்
கணக்கிலது கூடியதை  நினைக்கையிலே

மயங்கித்தான் கிடக்கிறது
நினைவுகள் அத்தனையும்

உம் சேவைக்கு அளவுண்டோ
விரிவாய்
சென்றுக் கொண்டிருக்கையிலே.

பிரார்த்திப்பேன் இறைவனிடம்
எந்நாளும் நீ இன்புற்றிருக்க,

எவ்வாறு நன்றியுரைப்பேன் படைத்தவனுக்கு
உமை என்னவளாய்  கொடுத்ததற்கு


இனியவளே இன்று நமக்கு திருமணநாள்.
உமக்கு   இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ராஜராஜேஸ்வரி




#நான் சொல்லிலே காட்ட
 அவரோ செயலில் காட்டினார்
  ''விருந்து படைத்து''




No comments: