யாருக்காக?
வெண்ணிலவே !
முழு நிலவாய்
உன் முகம் காட்டி
இரவினிலே மாவிளக்காய்
தனியாக மகிழ்வுடனே
நீ வலம் வருவாய்.
சிவந்திருந்த முகம் கண்டு
வெட்கத்தினால்
என நினைத்தேன்.
என் அருகில்
யாருமில்லா நிலையுணர்ந்து
மூழ்கினேனே சிந்தனையில்,
யாருக்காக,
நீ அழுதிருப்பாய்?
No comments:
Post a Comment