காதல் உணர்வு வந்த பின்னே
கவிதைகளாய் பொங்குதடா..
தவழ்ந்து செல்லும் முகிழ் மீது
தாவிக் குதிக்கத் தோனுதடா..
கள்ளியில் பூத்த மலரும்
களிப்படைய செய்யுதடா...
கடுகி ஓடும் காற்றிடையே
கலந்து பறக்கத் சொல்லுதடா..
பனி படர்ந்த முகடுமீது
படுத்துறங்க நினைக்குதடா..
நினைவுகளின் வேகத்திலே
நீந்தி பார்க்க முயலுதடா...
இளஞ்சூடாய் இரத்தமதை
உடல் முழுக்க பரவுதடா...
ஒளியற்ற இரவினிலும்
விழி திறந்து கிடக்குதடா...
உணர்வற்ற உரோமங்களும்
குத்திட்டு நிற்குதடா..
பால் சுரக்கும் மடிப்போலே
எச்சிலது ஊறுதடா...
அவள் நினைவு வந்தாலே
அத்தனையும் இனிக்குதடா.
நேரிலே கண்டதும்
கைக்கோர்க்க ,முயலுதடா
விழி கண்ட நேரமதில் (கோலமதில்)
மதி மயங்கி நிற்குதடா..
அளவுலாவும் நேரத்திலே
தோள் சாயத் துடிக்குதடா
No comments:
Post a Comment