ஏதேதோ நினைவுகள்
முடிந்தவரை எழுத்திலே
எண்ணியதைக் கொட்டி வைத்தேன்
அத்தனையும் தாளிலே.
கோபுரமாய் இருந்தாலும்
கிறுக்கல்களாய் போனதினால்
சிக்கலாய் போனதே
சீர்படுத்த முடியாமல்.
மறந்துபோன சொற்களோ
மறைந்து நின்று பார்க்குதே
அரைகுறையான உருவை
அலங்கரிக்க இயலாதே.
அறுப்பட்ட உணர்வுகள்
அந்நியமாய் நிற்குதே.
No comments:
Post a Comment