Translate

Wednesday, April 1, 2015

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.......

ஆனந்த பூங்காற்றே!
அமைதியான ஆழ்கடலே !!
அற்புதங்கள் நிகழ்த்துகிறாய்
அனுதினமும் எனக்காக .

கவிஞனாய் எனை மாற்றி 
காவியமாய் நீ திகழ்கிறாய்
காலங்களையும் கடந்து
உணர்வுகளில் உரைந்திருக்க.

உன்னுடைய சிறு அசைவும்
உள்ளத்தைக் கிளர்ச்சியூட்டி
ஆராதனை செய்ய செய்யும்
பனித்துளியாய் சில்லிட வைத்து.


 

No comments: