உலை வைக்க பிறந்தீரோ?
+++++++++++++++++++++++
உயிருக்கு உயிரானேன், உறவுக்கு துணையானேன்.
நம்பிக்கை அளித்திடவே கைக் கொடுத்தேன்.
செய் நன்றி மறந்தனையோ
நான் செப்புதல் உனக்கு புரிகிறதோ?
செவிக்கேளா மனிதனாய் சிந்தனையற்ற உருவாய்
செழித்திருக்கும் எங்களை பகுதிகளாய் துண்டிப்பாயோ?
பாவத்தின் மறுப்பிறப்பாய் பாவியாய் பிறந்தனையோ?
உன் வாரிசுகளின் உயிருக்கே பகையாய்
அழிக்க நீ வந்தெனையோ? 34
விதி முடிந்து வீழ்ந்து கிடக்கும்
எம் குலத்தினை பயன்படுத்திக் கொள்ளடா.
நான் வீழ்ந்து போனால்….
எத்தனையோ பயனாவேன்.
நீ வீழ்ந்து போனால்…..
நிலையென்ன?
ஒரு கணம் சிந்தனையை புரட்டுடா? 56
சொல்வதைச் சொல்லி விட்டேன்
கற்பதும், கற்காமல் போவதும்
உங்கள் விதியடா. 64
✍️
ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
No comments:
Post a Comment