Translate

Tuesday, July 3, 2018

காதல் கனவே கலையாதே




" காதல் கனவே கலையாதே "

சோலையில் பூத்த புதுமலர் இவளோ?
உறவு கொண்டாட வந்து இவள் இணைய,
இதழ்களால் தழுவிக் கொண்டோம்.
உடல்களை உரசிக் கொண்டோம்.
உள்ளத்தில் சூடேற,
உணர்வுகளால் முடி சிலிர்க்க,
கடுகிச் செல்லும் நேரமதை உணராமல்,
சட்டங்களுக்கும் கட்டுப்படாமல்
அலைகளாய் கவிப்படியது விரல்களும்.
வாய் சொல்லிற்கு வேலையின்றி
செயல்களில் மூழ்கியிருக்க,
நிலையில்லா ஆட்டத்தில் கட்டிலும்
நெகிழ்ந்து கொடுத்தது இலவம்பஞ்சு மெத்தையும்.
நிறைவான மோகத்தில் இருவரும், 14

நிசப்தத்தில் எதிரொளித்த ஓசைகள்,
மூடிக்கிடக்கும் தடுப்புகளை விலக்கப் பார்க்க,
மூச்சு முட்டும் வேகம் இருவருக்கிடையே.
விடிந்து நெடுநேரம் ஆனப்பின்னும்,
கணநேரமும் விடுப்பட விருப்பமின்றி,
காதல் கனவே கலையாதேயென
கண் மூடி நான் கிடந்தேன்
காதலிக்க இதுவரை துணையின்றி. 22

✍️

ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.

🙏






No comments: