தலைப்பு :- காதல் தென்றலே தீண்டாதே
++++++++++++++++++++++++++++++++++++
நினைவுகளில் கவிதையாய்
நித்தமும் நீந்த வைத்தாள்.
மை சொட்டிய எழுத்துகளெல்லாம்
அவளுருவை வடித்தோட,
இரவு கனவுகளில் விளையாடி,
பகலிலும் மயங்க வைத்தாள்.
பசப்பசப்பான வார்த்தைகளில்
பருவத்தைத் தூண்டி விட்டு,
விதவிதமாய்
விளையாட்டு காட்டினாளே
எனை அணுக விடாமல்
தவிக்க விட்டு . 29
சிட்டென பறந்து விட்டாள்
சிக்கிய பெரும் இரையுடனே.
தழுவிய தென்றலோ
தகிக்கிறது காலநேரம் பாராமல்.
மீண்டுமொரு மலரொன்று
வட்டமிடுகிறது எனைச் சுற்றி.
பட்ட சூடு போதுமெனக்கு.
புதிதாக வேண்டாமெனக்கு.
காதல் தென்றலே தீண்டாதே
ஒருபோதும் மீண்டும் என்னை. 56
✍️
ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
No comments:
Post a Comment