Translate

Wednesday, July 4, 2018

மௌனம்_ஏனோ_மனசாட்சியே






#மௌனம்_ஏனோ_மனசாட்சியே
++++++++++++++++++++++++++++++

உனக்குத் தெரிந்திருந்தும்,
உண்மை அறிந்திருந்தும்,
அச்சமதை நீ அடைந்தனையோ?
அறிவுள்ளோர்க்கு இது தகுதியாமோ? 10

எண்ணங்களின் குத்தல்கள்
சுற்றி வந்து குத்திய போதும்,
குருதியோடும் நிலையடைந்தும்,
குமைகின்ற மனத்துடனே,
உலா வருகின்றாயே,
உரைக்கவில்லையா உனக்கு? 24

உள்ளொன்றும் புறமொன்றும்
பேசாத நீ…
இன்று சாதிக்கிறாயே…
சங்கடத்தில் மூழ்க வைத்து. 31

தணலிலிட்ட புழுவாய்
துடிக்கின்ற போதினிலும்,
அசைவற்று இருக்கிறாயே?
அதற்கு என்ன பொருள்? 40

மொழியறியா மடந்தையோ?
ஒலிக்கேளா செவியோ?
விழிப்பாவை உள்ளிருந்தும்,
ஒளிப்புகா நிலையோ?
மனம்
கரையா கற்பாறையோ? 49

எள்ளிநகைப்பாரே,
மௌனம் ஏனோ?
மௌனம் ஏனோ?
மனசாட்சியே….
மௌனம் ஏனோ? 57

✍️

தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.

No comments: