🌸"எந்தன் உயிரே!"
+++++++++++++++++
கட்டியணைத்து புரண்டாயே.
காதலால் சொக்க வைத்து
காம ரசம் தந்தாயே
மிச்சமில்லையென நினைத்து
இரவெல்லாம் விழித்திருந்தாய்.
விழித்திருக்க வைத்திருந்தாய். 14
#ஆதவனுக்கும், பால்காரனுக்கும் பொறு-மையில்லை.
தட்டியெனை எழுப்பி விட,
தாமதிக்க வழியின்றி எதிர்கொண்டேன் விரைவாக. 24
களைப்பாக இருந்தாலும்,
கலந்த அந்த உணர்(நினை)வினால்
உள்ளச்சோர்வு விடைப் பெற்றோட,
தலை மூழ்கி
புது மலராய் விரைந்து வந்தேன்,
புத்துணர்ச்சி உமக்கூட்ட
மணங்கமழும் சூடான குளம்பி ஏந்தி. 44
அத்தானென நானழைக்க,
அள்ளி நீ எனை வளைக்க,
குழம்பியைக் காப்பாற்றி,
மீண்டும்
என்னை இழப்பேன் உன் அணைப்பில். 57
அசதியென நினைத்திருந்தேன்.
அகதியானதை பின் அறிந்தேன்.
ஏங்கியெனைத் தவிக்க விட்டு,
எரிதணலில் அடக்கமானாய்
சொல்லாமலே அடங்கிப் போனாய். 70
✍️
ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
#ஆதவனுக்கும் = சூரியனுக்கும்
🙏
No comments:
Post a Comment