இறைவன் தந்த வாழ்க்கையிது.
இனியும் தொடரும்
நாட்களது.
இல்லறத்தின் தொடக்கமோ
இன்று போல் நினைவிலாட,
இற்றுபோகா நலனுடனே
இறுதி நாள் தொடும்
வரை,
இணையாய் வாழ்ந்திருக்க,
இறைவியின் அருளுக்காய்,
இருவரும் தாள்
பணிந்தோம்
இன்று தொட்ட முப்பத்தெட்டில்.
எங்கள் திருமணநாளில்
உறவுகள் மற்றும் நட்புகளின்
ஆசிகள் மற்றும்
வாழ்த்துகளுக்காக.
உங்கள்,
தவப்புதல்வன் பத்ரி நாராயணன்
ராஜராஜேஸ்வரி
No comments:
Post a Comment