Translate

Saturday, April 7, 2018

மரம் மரமடா, வாழ்வுக்கு உயிரடா…


மரமதை ஊமையாய் நினைக்காதடா. \
வெட்டியழித்தால்,
விரைவில் உம் குலத்துக்கே மரணமடா. \
மனிதனெனும் பேரெடுத்தாய், ஆனால்
மரமண்டையாய் இருக்கிறாயடா. \
மந்திரத்தில் வந்திடாதடா. \
மரமது உடன் முளைத்திடாதடா. \
ஒரு வெட்டில் உன் தலைப்போச்சிடா. \
ஒரு மரமென்றால்
எத்தனையென கணக்கு போடடா. \

நலமுடன் நீ வாழ,
நல்வாயுவை வழங்குமதை,
நாசமதை செய்து விட்டால்? \
நசிந்திடுமே அத்தனையும்
நயமுடன் உரைக்கிறேனடா,
இனியேனும் புரிந்துக் கொள்ளடா. \ குல வாழ்வு
இற்று போகாமல் பார்த்துக் கொள்ளாடா. \
வரிசையாய் நானுரைக்க, எத்தனையோ உனக்கிருக்குடா,
இன்றிது போதுமடா மரம் வளர்த்து வாழ்வாயடா.\\

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: