Sathiabama Sandaran Satia 12/06/2015
இறை தந்த செல்வமாம்
அவருனக்கு இணையாக,
இருவருக்கும் துணையாக
ஈன்ற செல்வங்கள் உமை தாங்க
நலம் நாடும் நட்புகளும்
நாடி வந்து உமை வாழ்த்த,
நடக்கும் நாட்களும்
நலன் தந்து மகிழ்விக்க,
மகிழ்வான இந்நாளில்
அன்புடன் வாழ்த்தினோம்
இறையருள் கூடியே
இன்முகமுடன் வாழ்ந்திட.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிக்குயிலே.
No comments:
Post a Comment