இதழ் விரிக்க தேவையின்றி
மனம் விரித்தேன் தொந்தியானிடம்
ஆனந்தம் எனக்கருள
அணங்கு நான்,
தொட்டாள துணை வேண்டி
தொடுத்தேன் பூசாரத்தை.
.
தொடுக்கும் பூஞ்சரமோ
இவர் கழுத்தில்,
தந்தருள்வான் யான் மனமகிழ
தகுந்த நல்லுறவை.
கனிந்த நாட்கள்
கமழட்டும் நல்லுறவாய் ஐயனே.
-- தவப்புதல்வன்
படம்:
நன்றி திரு JayKay Jawahar Kannan with திரு Rajagopalan Srinivasan
''சித்திரப் பாடல்'' இயற்றியது :
நன்றி: திரு. இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி
__________________________ ________________________
நீ சொல்ல மாட்டாய் எனக்குத் தெரியும்
உனக்குப் பிரார்த்தனைகள்
__________________________ ___________
அந்திநேர வேளையிலே அழகுசுந்தரியே நீயிங்கு
வந்ததென்ன காரணத்தை மட்டும் விளக்குயிந்த
சுந்தரச் சொர்ணமுகம் சொக்கிமகிழ வருமந்த
சுந்தரனும்யாரு கொஞ்சம் சொல்லு வீடைதீரு
பாதம்வரை பட்டொளிரும் பாவாடைப் பட்டுச்சட்டை
பாவையுந்தன் மேனியில் படருதுசிகப் புத்துணி
கோவையிதழில் கொஞ்சும் கோலப்புன் னகையில்
கோலமிகு வளையல் கொண்டையில் மல்லிச்சரம்
மலர்தொடுக்கும் விரல்கள் வனப்பு வெண்டைக்காய்
கழுத்தில் மணிமாலை காதில் லோலாக்கு
பழுத்தக் கனியாக பளபளப்பு பளிங்குமேனி
மங்கயுந்தன் எழிலில் மனதும் மயங்குதடி
சிந்தனைக்கு நேரமில்லை தன்னந்தனியேவந்து
குந்தியிருந்து யிங்கு கையில் பூத்தொடுத்து
அந்தியிலே சாமிவரம் அன்றாடம் கேட்கிறாயே
பந்தியோடு சிந்துபாடப் போவதாரு சொல்லு
சந்தியிலே இருக்கின்ற சாமிகணபதியும் மனமகிழ்ந்து
உந்தனது வேண்டும் வரத்தைத்தர இதழ்விரிப்பாய்
============================================
இப்பாடலை ரசித்து இட்ட கருத்துக்கள்:
மனம் விரித்தேன் தொந்தியானிடம்
ஆனந்தம் எனக்கருள
அணங்கு நான்,
தொட்டாள துணை வேண்டி
தொடுத்தேன் பூசாரத்தை.
.
தொடுக்கும் பூஞ்சரமோ
இவர் கழுத்தில்,
தந்தருள்வான் யான் மனமகிழ
தகுந்த நல்லுறவை.
கனிந்த நாட்கள்
கமழட்டும் நல்லுறவாய் ஐயனே.
-- தவப்புதல்வன்
படம்:
நன்றி திரு JayKay Jawahar Kannan with திரு Rajagopalan Srinivasan
''சித்திரப் பாடல்'' இயற்றியது :
நன்றி: திரு. இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி
__________________________
நீ சொல்ல மாட்டாய் எனக்குத் தெரியும்
உனக்குப் பிரார்த்தனைகள்
__________________________
அந்திநேர வேளையிலே அழகுசுந்தரியே நீயிங்கு
வந்ததென்ன காரணத்தை மட்டும் விளக்குயிந்த
சுந்தரச் சொர்ணமுகம் சொக்கிமகிழ வருமந்த
சுந்தரனும்யாரு கொஞ்சம் சொல்லு வீடைதீரு
பாதம்வரை பட்டொளிரும் பாவாடைப் பட்டுச்சட்டை
பாவையுந்தன் மேனியில் படருதுசிகப் புத்துணி
கோவையிதழில் கொஞ்சும் கோலப்புன் னகையில்
கோலமிகு வளையல் கொண்டையில் மல்லிச்சரம்
மலர்தொடுக்கும் விரல்கள் வனப்பு வெண்டைக்காய்
கழுத்தில் மணிமாலை காதில் லோலாக்கு
பழுத்தக் கனியாக பளபளப்பு பளிங்குமேனி
மங்கயுந்தன் எழிலில் மனதும் மயங்குதடி
சிந்தனைக்கு நேரமில்லை தன்னந்தனியேவந்து
குந்தியிருந்து யிங்கு கையில் பூத்தொடுத்து
அந்தியிலே சாமிவரம் அன்றாடம் கேட்கிறாயே
பந்தியோடு சிந்துபாடப் போவதாரு சொல்லு
சந்தியிலே இருக்கின்ற சாமிகணபதியும் மனமகிழ்ந்து
உந்தனது வேண்டும் வரத்தைத்தர இதழ்விரிப்பாய்
============================================
இப்பாடலை ரசித்து இட்ட கருத்துக்கள்:
No comments:
Post a Comment