Translate

Friday, June 5, 2015

காதலில் அழிந்தாலென்ன?





சின்னதாய் ஓலைக்குடில்.
தொழுவத்தில் சிவப்பு பசு.
தென்னையிடை சிரிக்கும் நிலா
காதருகே மெட்டிச் சத்தம்.
காளையின் காதல் எல்லாம்
கண் வழி எட்டிப் பார்க்கும்.
பெண்ணிவள் நெஞ்சுக்குளே
பரவசம் பாய் விரிக்கும்.
வாழ்க்கை, இதுதான்.

அரசாங்க பச்சை நோட்டும்,
அடுக்கடுக்காய் பேரும் புகழும்
பத்தடுக்கு மாளிகையும்
மாலையும் மேடையும் - தான் (நான்)
காலடி தூசு என்பேன்.

அட போ....
ஆயிரம் பேசியென்ன
மோதலில் அழியும் உலகம்
காதலில் அழிந்தாலென்ன?


நன்றி: படைப்பாளிக்கு  

படித்தேன் ரசித்தேன்
எழுதியது யாரோ!



கருத்துரைகள்:

''அட போ ...
ஆயிரம் பேசியென்ன
மோதலில் அழியும் உலகம்
காதலில் அழிந்தாலென்ன?''

ஆழ்கடல்தான் ஆழமென்றால்
காதலும்தான் பெரும் ஆழம்
ஆழக்கடலதிலே முத்து உண்டாம்
காதலிலும் முத்தைக் காண்போம்
முத்தெடுத்து முகம் மலர்ந்தால்
முத்தாகும் காதல் வாழ்வும்!
காதலினால் அழியா வண்ணம்
            ஆழ்மனதால் காதலிப்போம்!

கட்டுண்டு கிடக்கட்டும்
காதலால் மனம்.
ஆனால் 

தெரியாமல் அலைகிறாரே
காதலுக்கும் காமத்திற்கும்.

#முத்தாய் மலர்ந்த கருத்துக்கு,
முகம் மலர்ந்த மகிழ்ச்சி நண்பரே 

No comments: