உன் விரல்களின் ஓட்டத்தில்
இசைக்கோர்வைகள் பிறப்பெடுக்க,
நடனமிடும் ஒலியலைகள்
செவிகளுக்கு விருந்தளிக்க,
அப்பப்பா.. மனம் குதிக்கிறது
ஆனந்தத்தில் கூத்தாடி.
நல்லாசிகள் சுதன் பேரனே,
இசையிலும் மேன்மையடைய.
பாசமுடன்,
தாத்தா,
பாட்டி.
No comments:
Post a Comment