Translate

Friday, January 11, 2013

கொடுமைக்காரத் தந்தை..


கொடுமைக்காரத் தந்தை..

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், நாராயணபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாஷா, இவருக்கு திருமனமாகி 4 வயது மகள் உள்ளாள். மனைவியின் நடத்தையின் மேல் சந்தேகம். அதனால் அடிக்கடி சண்டைப் போட்டுக் கொள்வர்.

இந்த சூழ்நிலையில், பாஷா, மனைவி மீதிருந்த கடும் கோபத்தினால் தனது 4 வயது மகளை கடுமையாக தக்கியதுடன், குளிர்சாதனப்பெட்டியில் (ஃபிரிஜில் ) வைத்து பூட்டி விட்டார். சம்பவம் குறித்து அறிந்த உள்ளூர் மக்கள், பாஷாவை சுற்றி வளைத்து தாக்கி, குழந்தையை மீட்டனர். 

காவலர்கள்  (போலீசார்) விரைந்து சென்று பாஷாவை கைது செய்ததுடன், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த சிறுமியின் உடல் நலம் தேறியுள்ளதாக மறுத்துவர்கள் (டாக்டர்கள் ) தெரிவித்தனர். 

No comments: