அருகே தெரிகிறது தொடுவானம்
செல்லச்செல்ல விலகுகிறதே நெடுந்தூரம்.
விடியலும் மாலையும் விந்தை நேரம்.
வண்ணங்கள் பூசிக்கொள்கிறது விதவிதமாய். 13
தொட்டு விட ஆசைதான் அன்றிலிருந்தே.
தொடர்ந்து நானும் முயற்சிக்கிறேன் அறிந்ததிலிருந்தே.
அறியாமையென சிரிக்கின்றார் பலரும் தானே.
இன்று தாண்டியதை செல்கின்றார் விண்ணுக்குத்தானே. 29
என்றேனும் நானாவேன் விண்ணேறும் அறிஞராய்தான்.
வானைத் துளைப்பேன் அன்றிலிருந்து நான்.
வான்காப்பு ஓட்டையையும் அடைத்திடுவேன். 40
✍️
ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
\
# வான்காப்பு ஓட்டை = ஓசான் படலத்தின் ஓட்டை
No comments:
Post a Comment