+++++++++++++++++++
அவள் ஆசை ஒன்றுதானடா
தாலி எடுத்து உனக்கு கட்ட.
எங்கள் பேச்சை கேளடா.
சரியென நீ சொல்லடா.
கழுத்தில் நீயும் கட்டிக் கொள்ளடா.
அம்மா அப்பா இருபக்கமும்
அமர்ந்து இவனை நச்சரிக்க,
இடையோடியது நினைவொன்று. 25
தாலி கட்டிய உரிமையாலே,
தினமும் மாமா அடித்து புரட்ட,
வெளிக்காட்ட முடியாமல்
அக்கா புலம்பி அழுகிறாள்,
குழந்தைகள் வாழ்வை மனத்தில் கொண்டு. 41
இவளும் என்னை அடிப்பாளோ?
எட்டி உதைத்து ஏசுவாளோ?
வேண்டாமடா இந்நிலை எனக்கு
அலறியபடி விழித்து எழுந்தான்,
நேற்றைய நிகழ்வுகளை….
ஒட்டிய கனவிலிருந்து. 57
✍️
ஆக்கம்:-
தவப்புதல்வன்
No comments:
Post a Comment