Translate

Saturday, June 2, 2018

உம் நிலையில்……







நாடி தளர்ந்தாலும்
தளராத மனம் உமக்கு.
வாட்டியெடுக்கும் வாழ்வையும்
எடுத்தாயோ சவாலாக.

நிழலில்லா இடத்திலே
நிற்கவியலா வெயிலிலே
நின் கால்கள் பதிந்திருக்க,
துலாக்கோலை நீ பிடித்து
துளித்துளியாய் விற்றாயோ?

என்று தீரும் துன்பமிது
என்ற நினைவு இருந்தாலும்,
மனத்தினில் பூட்டி வைத்து
மன்றாடுகிறாயோ காலத்தோடு. 32

கருமமாய் உன் செயலிருக்க
காலனவன் வந்தாலும்
காத்திடுவானோ உனைக் கண்டு. 40

எண்ணி எண்ணி வியக்கின்றேன்
இறைவன் படைப்பை நினைக்கின்றேன்.
உனது கவலைகள் களைந்து வாழ
இக்கணம் துதிக்கின்றேன். 52

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.




No comments: