Translate

Monday, June 2, 2014

செல்வம் தேடிய பாதை



தேடிவந்த செல்வமெல்லாம்
சொல்லாமல் போனதையா.
தேடித் தேடிப் பார்க்கின்றேன்
கண்ணாமூச்சி காட்டுதையா.
இன்று நாளை என்று சொல்லி
நாட்களெல்லாம் போகுதையா.
நடந்து வந்த பாதையெல்லாம்
திரும்பிப் பார்க்க சொல்லுதையா.
தோல்விகளால் பட்ட காயம்
தீப்பிழம்பாய் எரியுதைய்யா.
வெற்றிப்படியை தொடும்போது
வீரத்தழும்பாய் தெரியுமைய்யா.
இன்று இன்று என்று செய்து
விரைவாய் முடிவு காண்போமே.
நினைத்ததை முடித்து நாம்
வெற்றியைப் பெறுவோமே.
வெற்றியை அடையும்போது
செல்வமது சேருமே.
செல்வமது சேரும்போது
வளங்களெல்லாம் கூடுமே.
வெற்றியில் குடும்பமதை
மகிழ்ச்சி அடைய செய்வோமே.
குடும்பத்துடன் சேர்ந்து நாம்
கலகலப்பாய் இருப்போமே.


No comments: