Translate

Thursday, February 19, 2009

உமதும் ஒரு தொண்டு தான்.

மக்களரங்க நிகழ்ச்சிகளோ
உம் அருகில், எமை இழுக்கும்.

செய்திகள் பலர் சொல்ல
செவிமடுக்க செய்தீரே.

வாய் விட்டு சிரித்திடவே
வாய்ப்புகள் தந்தீரே.

உறவுகளின் பெருமைதனை 
உளமறிய செய்தீரே.

சேவைகள் விரிவடைய 
செயல்படுத்த முனைந்தீரே.

சாதனைகள் செய்தாரை
ஊக்கமடைய செய்தீரே.

எமைப் போன்றே பலரையும்
ஏக்கமடைய செய்தீரே.

சிறந்த நிகழ்ச்சிகள்  பலயிருக்கும்,
அதிலொன்றாய் உமதிருக்கும்.

சேவையென கொண்டாலே
உமதும் ஒரு சேவைதான்.

இனிதாய் என்றும் தொடர,
இனிய பொங்கல் வாழ்த்துகளுடன்,

A.M.பத்ரி நாராயணன் என அழைக்கபடும்
தவப்புதல்வன்.
06/01/2009.

No comments: