Translate

Friday, March 15, 2013

பாசமான பெற்றோரே!!!



              அமரர் பாக்யலக்ஷ்மி மாணிக்கம் - அமரர் P.A.மாணிக்கம் செட்டி.

காலங்கள் கடந்த பின்னே
கருமாதி செய்த பின்னே
காரியத்தில் வெற்றிக் கொண்ட
அருமை பெற்றோரான உங்களைப் பற்றி.

எண்ணிக்கைக்கு கணக்கில்லை.
எழுத்திலிட தெரியவில்லை.
எண்ணத்தில் நிலைத்தால் போதுமது.
என்னாளும் நலமாய் வாழ்வதற்கு.

கனவுகளிலும் நினைவுகள்
காற்றாய் கரைந்தோட,
நிதர்சன உண்மைகள்
நிலையாய் நிலைத்து விட,

வாரிசுகளான எம் சந்திப்பில்
வாசமாய் உங்கள் சாதனைகள்.
கோட்டைக் கொத்தளங்கள் சரித்திரமில்லை
கொடுத்த பாசமே சரித்திரமாய் இதயத்தில்.

நீண்டநெடிய உங்கள் பயணம்
இனி நிசமாக்க முடியாமல் போனாலும்,
நிலைத்திருக்கும், நினைவுகளில் மட்டுமே.
இது நிசமான உண்மையாகும்.

உழைப்பதற்கோ வயதில்லையென
உணர்வுகளில் ஊட்டிய,
உன்னத உம் நினைவுகளை
செயல்படுத்த என்னாளும் நினைத்திருப்போம்.

பின்குறிப்பு: எமது தந்தையாரின் முதலாமாண்டு நினைவுநாளை ஒட்டி எம் பெற்றோருக்கு நினைவஞ்சலி கவிதை இது. ஆங்கில வருட கணக்குப்படி பிப்ரவரி 22ம் தேதியும், எங்கள் மரபுப்படியும் நட்சத்திரம், திதி என்னும் குறிப்புப்படியும் மார்ச் 12ம் தேதி நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது.  

No comments: