நாளிதழ் வாசித்துக்
கொண்டிருந்தபோது
"உயிர் கொடுத்த
என்னுயிரே!" என்ற
தலைப்பிலே ஒரு கட்டம்
கட்டிய செய்தி கண்ணைக்
கவர்ந்தது. அதில்
கண்ணை ஓட்டிய போது
ஒரு வித்தியாசமான
அஞ்சலி செய்தியாகும்.
எப்பொழுதும் அஞ்சலி
செய்தியில் நினைவு
கூறத்தக்க வகையில்
ஓரிரு வரியில்
கவிதையாகவோ,
குறுஞ்செய்தியையோ
வெளியிடுபவர்களின்
தகுதியையும் தெரியும்படி
வெளியிட்டிருப்பார்கள்
என்பதை நாம் அறிந்ததே.
ஆனால் இது ஒரு
கட்டுரை
வடிவில் விரிவான
செய்தியாக இருந்ததால்,
தவழ விட்டேன்
கண்களை. தகவல்
என்னவென்று பார்போமா!
தாங்கள் அடிக்கடி சொல்லும் அரிய வார்த்தைகள் சில உண்டு அம்மா:
"பெற்றோரை அவர்களது காலம் முழுக்க மரியாதையுடனும், அன்பு,
பாசத்தோடும், பிள்ளைகள் நடத்த வேண்டும்.
தங்கள் நன்மைக்காக அவர்கள் தந்த உழைப்பையும், செய்த தியாகங்களையும்
நினைத்துப் பார்க்க வேண்டும்.
மாறாக, அதீத சுயநலத்தால்,பெற்றோரை வேதனைப் படுத்தி, மன
உளைச்சளுக்குள்ளாக்கி அவர்கள் இறந்த பிறகு பூஜையும் படையலும் போட்டு
நாமே (தாமே) சாப்பிடுவதால் என்ன பயன்?"
என வருந்துவீர்கள், பிள்ளைகளால் பதிக்கப் பட்ட தாய், தந்தையருக்கு உதவி
செய்வீர்கள்.
இன்றோ பல பெற்றோர்கள் முதியோர் இல்லம் அனுப்பப்படுகிறார்கள் அல்லது
வீட்டிலிருந்து விரட்டப்படுகிறார்கள். பலர் தங்களுக்கு நேரும் அவமானங்களை
வெளியே சொல்லமுடியாமல் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
பெற்றோரை அன்புடன் மதித்து வாழ்பவரின் குடும்பம் தழைக்கும், பேரும் புகழும்,
செல்வமும் தேடி வந்து சேரும். இந்த நிதர்சனமான உண்மையை உங்களின் இந்த
நினைவு நாளில் வாசிக்கும் ஒவ்வொருவரும் இதைத் தங்கள் கடமையாக
உணர்ந்து செயல்பட வேண்டுமென்பதே என் விருப்பம்! என அவர் தாயுடன்
வாழ்ந்த அந்த பொக்கிஷமான காலத்தை நினைத்தபடி அஞ்சலி
செலுத்தியிருக்கிறார் டாக்டர் V.ஜமுனா அவர்கள்.
பின் குறிப்பு:
1) Dr.V.ஜமுனா அவர்களைப் பற்றி இந்த நேரத்தில் நான் அறிந்ததைச் சொல்லி
சிறிது அறிமுகப்படுத்த வேண்டும். அடுத்த பதிவில்...
2) இதுவும் தவறவிட்ட தாமதமான பதிவு.
கருத்தியன்ற நண்பர்கள்:-
- Shanmuga Murthy உண்மை..ஐயா தவப் புதல்வனாரே...
தன்னைப் பெற்றெடுத்த தாய்தந்தையரைப் தவறாது பேணினால் தானகவே செல்வம் வந்து சேரும்.
நல்லவையெல்லாம் நடக்கும்.
இது அனுபவ உண்மை.
நன்று சொன்னீர்.Tuesday at 5:40pm · · 3 people
Sathiabama Sandaran Satia அருமையான வரிகள் சார்... கடவுளை வணங்க்கும்முன்... உன் தாய் தந்தையரை வணங்கு!! உன் வாழ்வு சிறக்கும்..!Tuesday at 5:50pm · · 4 people
Liyakath Aliஅருமையாக சொன்னீர்கள் தவப்புதல்வன் சார். இன்றும் தினமும் என் அம்மாவின் அருகில் அமர்ந்து அரை மணி நேரமாவது அவர்களுடன் பேசுவதை பாக்கியமாக கருதுகிறேன். அவர்களும் அதை மட்டுமே நம்மிடம் எதிர் பார்க்கிறார்கள். நாம் அருகில் சென்று அமர்ந்தாலே அவர்கள் ...See MoreTuesday at 8:01pm · · 5 people
Munuswami Muthuraman முன்னறி தெய்வங்களை ஒதுக்கி வைத்து விட்டு, எத்தனை கோயில் போய் சாமி கும்பிட்டென்ன , மறைந்த பின் படையல் இட்டு சாப்பிட்டுத்தான் என்ன பயன் ?Tuesday at 8:04pm · · 5 people
Raghavas Selvathirumal எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்Tuesday at 8:08pm · · 1 person
Sadeek Ali Abdullah வாழும் போது பெற்றோர்களின் அருமை உணராமல், பணிவிடை செய்யாமல் இறந்த பிறகு பூஜை செய்வதால் என்ன பயன் என்று செருப்பாலடிச்சா மாதிரி சொல்லியிருக்கிறீர்கள் பத்ரிநாராயணன் சார்... படிக்காத பாமரன் எவ்வளவோ தேவலாம் சார்... எங்க ஆத்தா, எங்க ஆயி, தாயின்னு எத்தனையோ மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். படித்த சில கபோதிங்க தான் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடுகிறார்கள். இத்துப் போன இதயமுள்ள மனிதப் போர்வையில் உலவும் மிருகங்கள்.Tuesday at 9:45pm · · 2 people
Sakthi Sakthithasan அன்பின் நண்பரே !
உள்லத்தைத் துளைக்கும் அருமையான் வினாக்களை வீசி சிந்தனைச் சக்கரத்தை சுழற்றியிருக்கிறீர்கள்.
அன்புடன்
சக்திYesterday at 5:00am · · 1 personவிருப்பகுறியிட்ட நண்பர்கள்:-




No comments:
Post a Comment