Translate

Monday, November 16, 2009

நன்னிலம் செழிக்க

உணவை இறைத்தால் சேதமாகும்.
நீரை சிந்தினால் விரையமாகும்.
பொருளை இறைத்தால் குப்பையாகும்.
புன்னகை சிந்தினால் நல்லுரமாகும்

நன்னிலமும் பூக்குமே.
புன்னகையால் நிறையுமே.
உலகமும் செழிக்குமே.
வாழுமே நல்லுறவிலே.

சிந்துங்கள் புன்னகையை
மனம் திறந்து.
அள்ளுங்கள் மகிழ்ச்சியை
வழிய! வழிய!!

மனம் திறந்து சிரித்தால்
நோயின்றி வாழ்வோம்.
முயற்சியது இருந்தால்
மகிழ்ச்சி என்றும் நிலைக்கும்.

1 comment:

c g balu said...

good kavithai. And friend you have news panni and some good tamil sites.