Translate

Sunday, November 15, 2009

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - பேரன்.B.B.S.S.சுப்ரித்துக்கு

பேரன்.B.B.S.S.சுப்ரித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து.
உன் உருவை பார்த்ததில்லை.
உன் செயலைக் கண்டத்தில்லை.
உன் குரலைக் கேட்டதில்லை.
செவி வழியே செய்திக் கேட்டேன்.
குறும்பு செயலை ரசிக்கக் கேட்டேன்.

காலமோ விரைந்து செல்ல,
வருடமோ முடிந்தது ஒன்று.
இரண்டிலே வைத்த அடியோ,
நூறையும் தாண்டும் நன்று.

உன்னால் குதுகலம்
வீட்டிலே நிறைய,
பகலும் இரவும்ஒன்றாய் தெரிய,
கை மட்டும் மாறிதொடர்ந்துனைக் கொஞ்ச,
நீ உமிழும் ஒலிகளை
அகராதியாய் தொடுக்க,
உன் செயல்கள் அனைத்தும்திரையின்றி ஓடும்.

நீ கைகளை அசைத்துசிரிப்பொலி உதிர,
கலை வண்ணம் கொண்டகலைஞனாய் கண்டார்.

மகிழ்விலே நாளும்கண்ணிலே பொங்கி கன்னத்தில் வழியஆனந்தம் அடைந்தார்.

உன்னை சுமந்த தாயோ
கனவிலே மிதக்க .
உரு கொடுத்த அவளும்
ஊட்டமதை ஊட்ட,

பாசமிகு தந்தையாய்,
அப்பாவும் உனையே
ஊர் சுற்றிக் கட்ட.

தொடரும் தலைமுறை
என்றேன பாட்டனார் ("அய்ய'')
பெருமையுடன் கொஞ்ச.

கருத்துடன் நாளும்கவனித்துக் கொள்ளும்
பாட்டியின் ("அம்மிய") செல்லம்
என்றுமே உனக்கு
அருமையாய் இருக்க.

இளமையும் வளமையும்
நிறைந்தே இருக்க,
நோய் நொடியற்றவாழ்வுனக்கு அமைய,
இறைவனின் அருளோஇன்றுள்ள நிலைப்போல்என்றுமே தொடர,
பிறந்தநாள் இதிலேவாழ்த்துக்கள் பகன்றேன்
பேராண்டி உனக்கே!
சின்ன தாத்தா
-தவப்புதல்வன்
(எ)
A.M. பத்ரி நாராயணன்.


மற்றும்
சின்னபாட்டி :
B.ராஜராஜேஸ்வரி.

சித்திமார்கள்
B.நிரஞ்சனா
B.சோபனாமுப்பாட்டனார்:

P.A.மாணிக்கம் செட்டியார்.

தேதி:
இடம்: சென்னை.

No comments: