Translate

Friday, October 9, 2009

பகற்கனவு






எழுதுகின்ற கோலைத்தான்

எடுத்துத்தான்வைத்திருப்பேன்.

கிடைக்கின்ற தாட்களில்

கிருக்கித்தான் வைத்திருப்பேன்.

வாய்கின்ற நேரங்களில்

வாசித்துக் கொண்டிருப்பேன்.

பதிக்கின்ற நேரங்களில்

பதறித்தான் போகின்றேன்.

மாற்றாரின் பதிப்புகளை

காணுகின்ற

போதெல்லாம்,

மாற்றங்களைக் கொண்டுவர

கனவுகளைக் காணுகின்றேன்.

மணலில் ஊற்றிய நீர் போல

காணுகின்ற கனவுகளும்,

காற்றில் பறக்கும் சருகுகளாய்

மறைந்துவிடும் நிழல் போல.

No comments: