Translate

Monday, March 5, 2018

உரத்து உரைக்கச் சொல்லுகிறேன்



படைத்தவனின் பாத்திரத்தில் இவனொரு அங்கமடா./
படியளக்க தவறிய காலியான பாண்டமடா./
கைப்பிடி அரிசிக்காய் கட்டப்பட்டு அடிப்பட,/
கோடிக்கோடியாய் கொள்ளையடிப்பவன்
சுகமாக வாழ்ந்து வர,/
காணக்கிடைக்கும் காட்சிகளோ
தலைக்குனிய செய்யுதடா, /

இளமைகளில் கொண்டாட்டம்
ஒரு பக்கம் பாய்ந்தாட,/
வருமையின் கொடுமையோ ஒரு பக்கம் பந்தாட,/
ஏற்றத்தாழ்வுக்கு அளவின்றி வேறுபாடு மிகுந்திருக்க,/
அடைந்துவிட துடிக்குதடா அதைக்கண்டு ஓராசை. /
எப்பாடு பட்டேனும் ஒரு நாளாவது அனுபவிக்க
குற்றமிழைக்க தூண்டுதடா மாயமான பிசாசொன்னு. /
மாறவேண்டும் நிலையிதுவும் மனதிலது துளிர் விட்டு./
வளர்பிறை இல்லையாயின் தேய்பிறையே முடிவாகும்./

ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: