Translate

Friday, September 21, 2007

வாழ்த்தினோம் உவந்தே.

வெல்லும் வேகம்
வெள்ளம் போல
வென்றது கண்டு
கொண்டது உள்ளம்.
மகிழ்விலே ரத்தம்
உச்சியிலிருந்து
பாதம் வரையும்,
பாயும் நேரம்
தோன்றும் இன்பம்.
உடலே சிலிர்த்து,
கண்ணம் உருண்டு,
முகமும் சிவக்கும்.
கைகளும் முறுக்கி
உதறிக் கொள்ளும்.
வாயும் திறந்து
கீதம் பாடும்.
கால்களும் குதித்து
முரசு கொட்டும்.
தொடர்ந்தே வென்று
உந்தன் பெயரை
நாட்டிக் கொள்க.

No comments: