Translate

Tuesday, September 18, 2007

முனகல்கள்

உன்னைக் கண் கொண்டு
காண முடியாதவாறு
என் கண்கள்
ஒட்டப் பட்டுவிட்டன.

உன் மகிழ்விலும், ஏக்கத்திலும்
பங்கு கொள்ள முடியாதவாறு
என் வாய்
தைக்கப் பட்டுவிட்டது.

உன் கண்ணிரை துடைக்கவோ,
பாராட்டவோ முடியாதவாறு
என் கைகள்
கட்டப் பட்டுவிட்டது.

ஆனாலும் உன் சிறு அசைவும்
என் காதுகளை விடைக்கச் செய்து,
மகிழ்விலும், வருத்தத்திலும்
கண்ணீர் கசிவதை
நீ அறிவாயா ?

என் முனகல்கள்
எனக்கே கேட்காத போது
உனக்கெங்கே
கேட்கப் போகிறது ?.

2 comments:

vetha (kovaikkavi) said...

vaalthukal... sakotharare!....

Dhavappudhalvan said...

மகிழ்ச்சி சகோதரி வாழ்த்துக்கு.