Translate

Saturday, September 8, 2007

விழிகளே ! விழிகளே !!

விழிகளே ! விழிகளே !!
என்றும் நிலைத்திருங்கள்.

மதி இழந்தபோது
சபித்திருப்பேன்,
ஒளி இழந்து போகட்டும்
என் விழிகளென்று.

இன்றோ உணர்கின்றேன்
என்னுயிர் பிரிந்தாலும்,
விழிகளே நிலைத்திருங்கள்
இருவர் வாழ்வொளிப் பெற்றிடவே.

No comments: