Translate

Wednesday, April 23, 2014

வலை நண்பருக்கு !

அலை பாயும் மனத்திலுள்ள,
வார்த்தைகளை இணைத்து வைத்து,
வலை வழியே அனுப்பி வைத்தேன்
கவிதையேனும் வடிவினிலே.

கண் வழியே பெற்று நீங்கள்
மனவறையில் வைப்பீரோ!

நண்பரிடையே அளவிளாவி
விரிவடைய வைப்பீரோ!

காற்றலையில் பறக்க விட்டு
மறைந்து போக செய்வீரோ!

வலையெனும் வில்லாலே,
ஒளியெனும் அம்பாலே,
கவிதையெனும் சொல்லாக,
மென்பஞ்சு இதமாக,
வலியொன்று இல்லாமல்,
உம்மனத்தை துளைத்திருப்பேன்.

தேன் சிந்தும் மலராக,
புன்னகை முகத்தில் வழிந்தோட.

வின்னிலிருக்கும் மீன்களாக,
கண்களோ மினுமினுக்க.

படித்துப் பார்த்த உங்களுக்கு
நன்றிகள் பல நவின்று
முடிக்கின்றேன் இக்கவிதைதனையே!!!!

1 comment:

c g balu said...

அம்பியில் நல்ல கவிதை முயற்சி நடக்கிறது அன்பரே!