Translate

Thursday, May 17, 2018

போராட்டமில்லா நிலையுண்டோ

ஈருடலும் ஓரிதயமாய் துடிக்குதடா.
நம் எண்ணங்களும்
ஒரு முகமாய் இருக்குதடா.
ஒட்டியது முதுகாயினும்
ஓடும் உணர்வுகள் ஒன்றுதானடா.
நினைவுகளே நமை ஆளுதடா,
தழுவலுகளுக்கு தேவையின்றி. 16

துண்டிக்க துடிக்கின்றனர்
துணையாய் தூசுகளை வாரிக்கொண்டு.
துண்டாடும் அவர்கள் நினைவு
தூளாகட்டும் நம் இணைப்பால். 27

ஆண்சாதி, பெண்சாதி இதுவன்றி
வேறு சாதிகள் ஏதடா?
காதலுக்கு கண்ணில்லை என்பர்.
ஆனால்
கண், மூக்கு வைத்திடுவார்
கள்ளமில்லா நட்புக்கும். 42

நாம் கடக்கும் பாதை
நமக்கு புதிதடா.
புரிந்துக் கொண்டு இணைவோமடா.
உறுதியாய் என்றும் விளங்க,
உறுதி படுத்திக் கொள்வோமடா.
மயக்கமில்லா நம் நிலையோ
மணவாழ்வாய் மலரட்டுமடா. 61

எதிர்புகளை உடைத்திடுவோமடா.
எடுத்தியம்பும் நிலையாக,
எதிர் கொண்டு வாழ்ந்திடுவோமடா.
இக்கணமே கவலைகளை மறந்திடுவோமடா. 71

ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: