Translate

Saturday, February 2, 2013

ஏது பயன்?

கணக்கில்லா காட்சிகள்
கண் முன் இருப்பினும்,
மதிப்பார்வை இருந்தும்,
விழிப்பார்வை இல்லையெனின்
ஏது பயன்?

கோடானகோடி செல்வம்
கொடுத்து வைத்திருப்பினும்

விழிப்பார்வை இருந்தும்,
மதிப்பார்வை இல்லையெனின்
ஏது பயன்?

மதிப்பார்வை ஆழமாயிருந்தும்
விழிப்பார்வை கூர்மையாயிருந்தும்
கொடுப்பினை இல்லையெனின்
ஏது பயன்?

சான்றோர் சொல் மறந்து
சாலப்பெரும்பிழையை
சலனமின்றி நீ புரிந்தால்
அருளிய வாக்குக்கு
ஏது பயன்?

No comments: