Translate

Friday, February 1, 2013

கண்ணீர் அஞ்சலி

எமது சகோதரி திருமதி.பிரபாவதி அவர்களின் கணவரும், தாய் மாமா மகனுமான ஜெனார்த்தனம் அவர்களின் மறைவை ஒட்டி இரங்கற்பா...



அனுபவித்தது போதுமென்று
அறியா வழி நோக்கி
அந்தரத்தில் விட்டனையோ
அருங்குடும்பத்தினையே!

ஆசைகள் போதுமென்று
அடைத்து விட்டு போனீரோ ?
அத்தனை நிகழ்வுகளையும்
அழித்து விட்டு சென்றீரோ?

ஆழ்கடல் மௌனமாக
அமிழ்ந்ததோ நின் பேச்சு?
அளவற்ற நினைவலைகள்
அலையடித்தது எம் மனத்தில்.

ஆதி முதல் அந்தம் வரை
அறிந்தவர் யாருமில்லை.
ஆற்றல் பெற்றவராய்
ஆட்டுவித்தீர் அனைவரையும்.

அங்குசமாய் உம் செயல்கள்
ஆனை(ணை)களாய்  பலர் அடங்க,
அறியாமல் போனீரே
ஆயுதத்தின் வலிமையையே.

அல்லலுறும் நிலைக்கொடுத்து ,
ஆட்டுவிக்கும் ஆண்டவனின்
அருளென்று கூறாமல்
அடைக்கலமானீர் ஏன் விரைந்து?

No comments: